பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதுமுகங்கள் லகுபரன்-ஸ்வாதியை வைத்து ராட்டினம் என்ற படத்தை இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. அந்த படம் பேசப்பட்டதால் முதல் படத்திலேயே கவனிக்கப்படும் இயக்குனரானார் அவர். அதையடுத்து ஆர்யா தம்பி சத்யாவை வைத்து எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களின் கால்சீட் கிடைக்காததால் இளவட்ட பசங்களை வைத்து ஒரு படம் இயக்குகிறாராம் தங்கசாமி. அதற்கான கதை விவாதத்தை தற்போது தொடங்கியிருக்கும் அவர், அந்த படத்தில் கமர்சியல் கருதி சில முன்னணி நடிகர் நடிகைகளையும் இணைக்கிறாராம். அதோடு, ராட்டினம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த அவர், எட்டுத்திக்கும் மதயானை படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். ஆனால், புதிய படத்தில் அப்படி செய்யப்போவதில்லையாம். முழுக்க முழுக்க அந்த படத்தில் இயக்குனராக மட்டுமே செயல்படப்போகிறாராம்.