பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'வாலு' படத்தின் வெளியீடு நீண்ட காலமாக நீண்டு கொண்டே போய் ஒரு வழியாக அடுத்த வார வெள்ளிக்கிழமையான ஜுலை 17ம் தேதியன்று வெளியாக உள்ளது. அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரஜினி முருகன்' படமும், தனுஷ் நடிக்கும் 'மாரி' படமும் வெளியாவதாக இருந்தது. 'ரஜினி முருகன்' படத்தின் வெளியீடு பற்றி எந்த சத்தத்தையும் காணோம். 'மாரி' படம் ஜுலை 17ம் தேதியில்தான் வெளிவரும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து ஜுலை 24ம் தேதியன்று வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதனால் சிம்பு ஜுலை 17ம் தேதியன்று சிங்கிள் ஆக வருகிறார்.
இரண்டு படமும் ஒரே நாளில் வெளிவந்தால் இருக்கும் திரையரங்குகளை பங்கு போட்டு ஆக வேண்டும். அதே சமயம் ஆளுக்கொரு நாளில் வந்தால் கொஞ்சம் அதிகமான திரையரங்குகள் இருவருக்குமே கிடைக்க வாய்ப்பிருக்கும். அதனால்தான் தனுஷ் தானாகவே படத்தைத் தள்ளி வைத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள். ஒரு வேளை சிம்பு நீண்ட நாட்களாக படத்தை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கூட உதவியிருக்கலாம் என்கிறார்கள்.
எப்படியோ சிங்கிள் ஆக வந்து சிம்பு சிக்சர் அடித்தால் சரி...!