மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தமிழ்நாடு திரைப்படஇயக்குனர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்ரமன் தலைவராக இருக்கிறார். 2015-2017ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதும், தற்போது தலைவராக உள்ள விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், துணை தலைவர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனுதாக்கல் செய்தனர். இணைச் செயலாளர் பதவிக்கு சுந்தர்.சி, லிங்குசாமி, பேரரசு, துணை இயக்குனர் ஏகாம்பவாணன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சமுத்திரகனி, ரமேஷ் கண்ணா, புவனா, வேல்முருகன், நம்பிராஜன், ஆர்.கண்ணன், ராஜா கார்த்திக், வேல்முருகன், ரவிமரியா, மனோஜ்குமார், திருமலை ஆகிய 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களை எதிர்த்து புதிய அலை என்ற பெயரில் சில உதவி இயக்குநர்கள் தேர்தல் களத்தில் குதிக்க இருந்தனர். ஆனால் அவர்கள் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றதால், வேட்புமனு தாக்கல் செய்திருந்த விக்ரமன் அணியைச் சேர்ந்த அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று மதியம் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் பிரம்மாண்டமான விரந்து நடைபெற்றது. இணைச் செயலாளராக உள்ள லிங்குசாமி சார்பில் நடைபெற்ற இந்த விருந்தில் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்துக்காக சில லட்சங்களை ஒதுக்கி செலவு செய்துள்ளார் லிங்குசாமி.