ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வளர்ந்து வரும் ஹீரோக்களைப் பொறுத்தவரை ஷோலோ ஹீரோவாக நடித்து தங்களுக்கென ஒரு இமேஜை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் விஜயசேதுபதி ஆரம்பத்தில் இருந்தே அப்படி நினைக்கவில்லை. அதோடு, ஹீரோயிசம் என்பதில் இருந்து மாறுபட்டு, கதையின் நாயகனாகவே நடித்து வந்தார். மேலும், ரம்மி, வன்மம், புறம்போக்கு, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் டபுள் ஹீரோ சப்ஜெக்டுகளில் நடித்தவர் தற்போது, இறைவியில் பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடிப்பவர், அடுத்து ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமன் இயக்கத்தில் ஜெயம்ரவி மீண்டும் நடிக்கும் படத்திலும் விஜயசேதுபதி இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். ஆனால், தான் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்த வன்மம், புறம்போக்கு படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் தொடர்ந்து அதுபோன்ற கதைகளில் நடிக்க விஜயசேதுபதிக்கு விருப்பமில்லை என்றபோதும், ஜெயம்ரவி நடிக்கும் படத்தை பிரபுதேவா தயாரிப்பதோடு, அவரே கேட்டுக்கொண்டதால் மறுக்க முடியாமல் அந்த படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம் விஜயசேதுபதி.