இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
80களின் கனவு கன்னியாக நிகழ்ந்தவர் ஜெயப்ரதா, 200 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்தவர். அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் தற்போது தனது மகன் சித்து என்கிற சித்தார்த்தை உயிரே உயிரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். தமிழ் சினிமாவை விட தெலுங்கு, இந்தி சினிமாவில்தான் அவருக்கு செல்வாக்கு அதிகம். அப்படி இருந்தும் அவர் தன் மகனை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.
இது பற்றி ஜெயப்பிரதா கூறியதாவது: மற்ற மொழிகளை ஒப்பிடும்போது தமிழ் படத்தில் நான் நடித்தது மிகவும் குறைவுதான். நினைத்தாலே இனிக்கும், சலங்கைஒலி படங்களையும், அதில் நடித்த என்னையும் தமிழக மக்கள் தங்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். இப்பவும் நான் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் நினைத்தாலே இனிக்கும் படத்தில் தலையாட்டுவது போல ஆட்டச் சொல்லி பார்த்து மகிழ்கிறார்கள். இந்த அளவிற்கு அன்பான மக்களை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. என் மீது கொண்டிருக்கும் அன்பை என் மகனுக்கும் தருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் சித்துவை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறேன.