மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எந்த நேரத்தில் நகுல் நடித்த நாரதன் படத்திற்கு நாரதன் எனப்பெயர் சூட்டினார்களோ? பாவம்., நாரதன் நாயகர் நகுல் அதிக சம்பளம் கேட்டு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கே வரவில்லை...என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நாரதன் படத்தின் தயாரிப்பு தரப்பு புகார் பட்டியல் வாசிக்க., உடனடியாக, தன் தரப்பு நியாயத்தை நடிகர் சங்கத்திற்கு கடிதமாக அனுப்பியுள்ளார் நகுல். கூடவே, அதனோடு தனக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அக்ரிமெண்ட்டும் போடப்பட்டிருக்கும் விஷயத்தையும் அதன் காப்பியையும் நடிகர் சங்கத்திற்கு நகுல் அனுப்பிய பின் தான் நகுல் மீதுள்ள நியாயம் நடிகர் சங்க செயலாளர் ராதாரவிக்கே தெரியவந்திருக்கிறது. அதில் உள்ள விவரப்படி., நகுலுக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, பல தவணைகளாக, ரூ. 32 லடசம் தரப்பட்டிருக்கிறது. மீதி ரூ. 18 லட்சம் வந்தால்தான் மத்திய அரசின் புதிய உத்தரவுப்படி, வாங்கிய சம்பளத்திற்கு வரிகட்டும் உத்தேசத்தில் இருந்திருக்கிறார் நகுல். வரியை உரிய நேரத்தில் கட்டி முடிக்காவிட்டால் மாதாமாதம் காலதாமத பெனால்டி கட்ட வேண்டுமாம்.