சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
சமுத்திரகனி இயக்கிய உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. ஆனால் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால்தான் டைரக்சன் பக்கம் திரும்பி, சென்னை 28 -என்ற படத்தை இயக்கினார். எதிர்பார்ப்பில்லாமல் வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வெங்கட்பிரபு தொடர்ந்து படம் இயக்க கதவுகளை திறந்து விட்டது. பின்னர், அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா வெங்கட்பிரபுவை ஸ்டார் வேல்யூ கொண்ட இயக்குனராக்கியது. இருப்பினும், அதன்பிறகு கார்த்தியை இயக்கிய பிரியாணி, சூர்யாவை இயக்கிய மாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால், தற்போது வெங்கட்பிரபுவின் மார்க்கெட் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதோடு, அவர் இயக்கும் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை தழுவிய இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்ட வரும் நிலையில், அடுத்து வெங்கட்பிரபு கால்சீட் கேட்ட சில ஹீரோக்களிடமிருந்து அவருக்கு சாதகமான பதில் வரவில்லையாம். அதனால் மங்காத்தாவிற்கு பிறகு 5 இளவட்ட ஹீரோக்களை வைத்து இயக்குவதற்காக ரெடி பண்ணிய கதையை மீண்டும் அவர் கையிலெடுப்பார் என்று கூறப்படுகிறது.