டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், ஏழாம் அறிவு, 3, பூஜை படங்களுக்குப்பிறகு புலியில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக அஜீத்தின் புதிய படத்திலும் நடிக்கிறார். இதேபோல், இந்தியிலும் மூன்று மெகா படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஸ்ருதிஹாசன் நடித்த இந்தி படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படங்களில் அவர் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், தற்போது நடித்து வரும் வெல்கம் பேக், யாரா, ராக்கி ஹாட்சம் ஆகிய படங்களில் இன்னும் அதிரடியான நடிப்பை வெளிபடுத்தி வருகிறாராம.
அதனால் நடித்து வரும் இந்தி படங்கள் வெளியாகும்போது ஸ்ருதிஹாசன் இன்னும் பரபரப்பான நடிகையாகி, இன்னும் பெரிய மார்க்கெட்டை பிடித்து விடுவார் என்று கூறப்படுகிறது. அதன்காரணமாக, தற்போது மேலும் சில இந்தி இயக்குனர்கள் ஸ்ருதியிடம் கதை சொல்லி வருகிறார்களாம். அதோடு, மற்ற மொழிகளை குறைத்து விட்டு இந்தி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறும் ஸ்ருதியை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். அதனால் இப்போது நடித்துள்ள படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட்டடித்தால் அடுத்து ஸ்ருதியின் கவனம் இந்தி பக்கம் அதிகமாக திரும்பி விடும் என்று தெரிகிறது.