ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக விஜய், அஜீத் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது ஒவ்வொரு படங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு படம் முடிகிறபோது பிரியாணி விருந்தளிப்பது, உதவித்தொகை வழங்குவதை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களைப்பார்த்து தனுஷ், விஷால் உள்ளிட்ட சில நடிகர்களும் தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கி வருகின்றனர்.
ஆனால் கதாநாயகிகள் யாரும் இதுவரை அந்த மாதிரி படப்பிடிப்பு குழுவுக்கு பரிசு கொடுத்ததில்லை. அதை முதன்முதலாக சமந்தா தொடங்கி வைத்திருக்கிறார். அதாவது தனுசுடன் அவர் நடித்துள்ள விஐபி 2 படத்தில் நடித்தபோது படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே தலா ஐந்தாயிரம் ரூபாய் பரிசாக கொடுத்திருக்கிறார்.
தமிழில் இப்போதுதான் இதுமாதிரி செய்திருக்கிறார் என்றபோதும், தெலுங்கு படங்களில் நடித்தபோது அவ்வப்போது இதுபோன்று உதவி செய்து வந்த சமந்தா, தன்னைச்சுற்றியிருக்கும் ஹேர் டிரஸ்ஸர், மேக்கப்மேன் போன்ற கலைஞர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்து வருகிறாராம். அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாராம் சமந்தா.