தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இதுவரை கிட்டத்தட்ட வெளியான அனைத்து படங்களுக்குமே ஆன்லைனில் அதன் திருட்டுத்தனமான காப்பி பதிவேற்றப்பட்ட வேதனையான சம்பவம் நிகழ்ந்திருக்கத்தான் செய்யும். பலர் அதுகுறித்து புகார் கொடுத்தாலும், பிரச்சனை எந்த வித பரபரப்பும் இல்லாமல் கொஞ்ச நாளில் அமுங்கிவிடும். ஆனால் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படமும் இதேபோன்றதொரு பிரச்சனையை சந்தித்துள்ளது. ஆனால் இதில் மத்திய சென்சார் போர்டு தலையிட முடிவுச்செய்திருக்கும் அளவுக்கு பிரச்சனை சீரியஸாக மாறியுள்ளது.
இந்தப்பிரச்சனையில் தலையிட்டு, முழுமையான விசாரணை நடத்த வேண்டி சென்சாருக்கு கோரிக்கை வைத்திருகிறார் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன்.. அதை ஏற்றுக்கொண்ட சென்சார் போர்டு சேர்மன் பஹ்லாஜ் நிஹ்லானி இந்தப்பிரச்சனையை சென்சார் போர்டு ஆரம்பகட்டத்தில் இருந்து விசாரணை செய்யும் என அறிவித்துள்ளதோடு, இதற்காக் விரைவில் கேரளாவுக்கும் வர இருக்கிறார்.
சென்சார் போர்டு இதில் விசாரணை பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது..? விஷயம் இருக்கிறது. இந்தப்படம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த தயாரிப்பாளர் அன்வர் ரஷீத், இரண்டுவிதமான புகார்களையும் கூறியுள்ளார். அதில் ஒன்று ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட 'பிரேமம்' படத்தின் காப்பி சென்சார் செய்யப்பட காபி என்றும், அது கனடாவில் இருந்து பதிவேற்றப்பட்டுள்ளது என்பது தான். அதனால் தான் இது குறித்து விசாரிக்க சென்சார் போர்டு களம் இறங்க முன்வந்ததும்.
சரி.. பிரேமம் பட பிரச்சனையில் தலையிட, சென்சார் போர்டுக்கு சம்பந்தமே இல்லாமல் இயக்குனர் பிரியதர்ஷன் கோரிக்கை வைத்ததன் பின்னணி என்ன..? அதற்கு அன்வர் சொன்ன இன்னொரு புகார் தான் இதற்கு காரணம். அதாவது சென்னை மற்றும் திருவனந்தபுரம் இரண்டு இடங்களில், இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் நடைபெற்ற முக்கிய ஸ்டுடியோக்களில் ஏன் சோதனையும் விசாரணையும் நடத்த தயங்குகின்றனர் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார் அன்வர்.. ஆனால் அன்வர் குறிப்பிடும் ஸ்டுடியோக்கள் இரண்டுமே இரண்டு மலையாள பிரபலங்களுக்கு சொந்தமானவை.
அதில் சென்னையில் இருக்கும் இயக்குனர் பிரியதர்ஷனின் ஸ்டுடியோவும் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுகுறித்த உண்மைத்தன்மையை அனைவருக்கும் தெரிவிக்க அவர் சென்சார் போர்டை அழைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இப்படித்தான் அந்த ஸ்டுடியோவில் இருந்த ஒருவரால் 'புலி' பட டீசர் லீக்காகி, அவரை பிரியதர்ஷனே போலீசில் ஒப்படைத்த நிகழ்வும் நடந்தது குறிப்பிடத்தக்கது.