ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மன்மதலீலை, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் ஜெயப்பிரதா. ஆனால் அதன்பிறகு பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தினார். அந்த வகையில், தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமலுடன் இணைந்து நடித்தது போன்று தெலுங்கு, கன்னடம், இந்தி சினிமா வரை அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடியவர் ஜெயப்பிரதா.
தமிழில் கடைசியாக கமல் நடித்த தசாவதாரம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். காட்டைத் திறக்கும் சாவிதான் காற்று என்ற பாடலில் அவருடன் நடனமாடினார். அரசியலில் பிஸியான ஜெயப்பிரதா, தனது மகன் சித்துவை உயிரே உயிரே என்ற தமிழில் படத்தில் அறிமுகம் செய்கிறார்.
இந்த படத்தை தானே தயாரித்திருக்கும் ஜெயப்பிரதா, பட நாயகி ஹன்சிகாவுக்காக ஒரு பாடலை தனது சொந்த குரலிலேயே பாடியிருக்கிறார். இதற்கு முன்பு எந்த படத்திலும் அவர் பாடாமல் இருந்தபோதும், பரத நாட்டிய கலைஞரான ஜெயப்பிரதா, இசையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், இந்த படத்தில் அவரை கட்டாயப்படுத்தி பாட வைத்திருக்கிறார்களாம். மேலும், உயிரே உயிரே படத்துக்காக தான் பாடிய பாடல் ஹிட்டானால் அடுத்தடுத்து தனது மகன் சித்து நடிக்கும் படங்களில் அவ்வப்போது பின்னணி பாடவும் முடிவெடுத்துள்ளாராம் ஜெயப்பிரதா.