பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
அட்டகத்தி நந்திதாவைப் போன்று கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஆருஷி, தீபா சன்னதி, அகிலா கிஷோர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் மூன்று பேருமே கன்னட சினிமாவில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தனர்.
இதில், தீபாசன்னி எனக்குள் ஒருவன் படத்திற்கு பிறகு இப்போது யட்சன் படத்தில் நடித்து வருகிறார். அகிலா கிஷோர் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தவர், இப்போது மூன்றாம் உலகப்போர் படத்தில் நடித்துள்ளார்.
இதேபோல் அழகன் அழகி படத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்த ஆருஷி, வேல்முருகன் போர் வெல்ஸ், இருடியம் படங்களைத் தொடர்ந்து அடித்தளம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் ட்ராப்பாகி விட்டது. அதன்பிறகு தமிழில் யாருமே கண்டுகொள்ளாததால் தெலுங்கிற்கு சென்று ஹீரோயின் மிஸ்ஸிங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆனபோதும், கோடம்பாக்கத்தில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஆருஷிக்கு இருப்பதால் தற்போது மீண்டும் மீண்டும் வந்து சில டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார். அதோடு, இதற்கு முன்பு ஒரு வட்டம் போட்டு நான் இந்த அளவுக்குத்தான் நடிப்பேன். இதை மீறி கிளாமரை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று கண்டிசனாக கூறிவந்தவர், இப்போது தன்னைச்சுற்றிய போட்டிருந்த குடும்ப நடிகை என்கிற வட்டத்தை அழித்து விட்டு, கதைக்கேற்ற நடிகையாக மாறி விட்டதாக கூறி வருகிறார். ஆக, சரியான கதை கிடைத்தால் கவர்ச்சி கோதாவிலும் வரிந்து கட்டி விடுவாராம் ஆருஷி.