ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தற்போது அஜீத்தின் பாசத்திற்குரிய தங்கை வேடத்தில் நடித்து வரும் லட்சுமிமேனன், நிஜத்திலும் அதிக செண்டிமென்டானவராம். குறிப்பாக, அவரது அம்மா மீது அதிக பாசம் கொண்டவராம் லட்சுமிமேனன். அதனால் அம்மா இல்லாமல் உறவினர்கள் துணையுடன் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டேயிருப்பாராம்.
அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளத்தில் நடக்கிற விசயங்களையும் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டேயிருக்கும் லட்சுமிமேனன், தான் நடிக்கப்போகும் காட்சிகள் பற்றியும் கூறுவாராம். பின்னர் அந்த காட்சியில் நடித்த முடித்தபிறகு தான் இந்த மாதிரி நடித்ததாகவும் சொல்வாராம். அந்த அளவுக்கு இங்கே நடப்பதை உடனுக்குடன் அம்மாவுக்கு தெரியப்படுத்திக்கொண்டேயிருப்பாராம் லட்சுமிமேனன்.
மேலும், அவரது அம்மா உஷா மேனன், ஓகே செய்த கதைகளில் மட்டும்தான் நடிப்பாராம் லட்சுமிமேனன். காரணம், சில கதைகள் அவரது அம்மாவுக்கு பிடிக்காத நிலையில், இவர் ஓகே பண்ணி நடித்து எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்கவில்லையாம். அதனால் சமீபகாலமாக தனது அம்மா ஓகே சொல்லும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்கிற செண்டிமென்ட்டையும் கடைபிடித்து வருகிறாராம் லட்சுமிமேனன்.