'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்ரீதிவ்யா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றபோதும், சென்னையிலும் அவருக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அதனால் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர்களை சந்தித்து பொழுதை கழிக்கிறார். அப்போது தான் ஒரு நடிகை என்பதை மறந்து விட்டு, தெருக்களில் இறங்கி பால் அடித்து விளையாடுகிறாராம் ஸ்ரீதிவ்யா.
அதோடு நில்லாமல், உயிருக்கு உயிரான தோழிகளை சில சமயங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கும் வரவைத்து கேரவனுக்குள் அமர்ந்து விளையாடுகிறாராம். ஆனால் தனக்கு டேக் ரெடியாகி விட்டதை உதவி இயக்குனர்கள் தெரிவிக்கும்போது தோழிகளை கேரவனுக்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு கேமரா முன்பு வந்து நடிக்கிறார்.
ஆனால், யாராவது தோழிகள் தான் நடிப்பதை பார்க்க வேண்டும் என்று வெளியில் வந்தால், அவர்களை உள்ளே செல்லுமாறு கண்டிசனை துரத்தி விடுகிறாராம். காரணம், தான் நடிப்பதை தனக்கு வேண்டப்பட்டவர்கள் பார்த்தால் ஸ்ரீதிவ்யாவுக்கு நடிப்பே வராதாம். அதன்காரணமாகவே, ஸ்ரீதிவ்யாவின் அம்மா அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஏரியா பக்கமே வரமாட்டாராம். அந்த அளவுக்கு அம்மாவுக்கும் கண்டிசன் போட்டு வைத்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.