மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
இன்றைய தேதியில் இந்திய திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்துள்ள படம் 'பாகுபலி' தெலுங்குப்படம்தான். இந்திய சினிமாவரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் அதாவது சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் பிரம்மாண்ட படம் இது. ராஜ்மௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா முதலானோர் நடித்துள்ள 'பாகுபலி' படம் வருகிற 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்குச் சென்றது. 'பாகுபலி' படத்தை பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் 'பாகுபலி'க்கு 'யு/ஏ' சர்டிஃபிகேட் வழங்கியிருக்கிறார்கள். 'யு/ஏ' வழங்கப்பட்டதால் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளில் படத்தை வெளியிடுபவர்களுக்கு பிரச்சனை ஒன்றுமில்லை. தமிழில்தான் வரிவிலக்கு பஞ்சாயத்து இருக்கிறது. எனவே 'பாகுபலி' படத்துக்கு 'யு/ஏ' சர்டிஃபிகேட் வழங்கப்பட்டதால் இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றதாம்.