‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவின் இசை ராஜாவான இளையராஜா, சென்னை, தி.நகர் வாணி மகாலில், மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று கூட்டியிருந்தார். அதில் கலந்து கொண்டு இளையராஜா பேசியதாவது...
நான் எத்தனையோ பாடல்களை உங்களுக்காக பாடியிருக்கிறேன். நான் இங்கு உங்களை சந்திக்க காரணம், நீங்கள் என் பாடல்களையோ அல்லது பிறரது பாடல்களையோ மேடையில் பாடும்போது, அதற்கு உரிய அனுமதி பெற்று பாட வேண்டும். இதற்காகத்தான் ஐபிஆர்எஸ்., என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்கள் முறையாக அதை செய்யவில்லை.போலியான கணக்கு காட்டி என்னை போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள். என் பாடல்களுக்காக அவர் வசூலிப்பதில் 10 சதவீதம் கூட எனக்கு கிடைக்கவில்லை, அவர்கள் கொடுப்பதை வாங்க எனக்கு மனமில்லை, அதனால் அந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டேன்.
நான் இப்போது உங்களிடம் வேண்டுவது, நீங்கள் என் பாடல்களை பாடும் போது என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். இவ்வளவு பணம் தாருங்கள் என்று உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை, எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்பதை நீங்களும், சினி மியூசிக் யூனியனும் பேசி முடிவெடுங்கள். இப்படி பேசுவதால் நான் பணம் கேட்டு வருகிறேன் என்று எண்ண வேண்டாம், நான் எப்பவும் கொடுப்பவன், கேட்பவன் அல்ல.
இவ்வாறு இளையராஜா பேசினார்.