மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மோகன்லால் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் 'லோஹம்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்ததாக பத்மகுமாரின் டைரக்சனில் கனல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இவற்றிற்கு முன்னரே மோகன்லால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'புலி முருகன்' படப்பிடிப்பு மட்டும் துவங்கும் அடையாளத்தையே காணோமே என்றால் 'புலி முருகன்' பதுங்குவது அசுர பாய்ச்சலுடன் பாய்வதற்குத்தான் என்கிறார் படத்தின் இயக்குனர் வைசாக். இதற்குமுன் கடந்தவருடம் அவர் இயக்கிய 'கசின்ஸ்' பட தோல்வி தான் 'புலி முருகன்' படப்படிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருக்க காரணமா என்றால் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்கிறார் கூலாக.
“இந்த மாதத்தில் வியட்நாமில் 'புலி முருகன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. இதை முடித்ததும் மோகன்லால் அங்கிருந்து தோகாவில் நடைபெற இருக்கும் 'கனல்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அங்கே 'கனல்' படத்தை முடித்துவிட்டால் அடுத்து அவரது தேதிகள் தொடர்ந்து புலி முருகனுக்குத்தான்.” என்கிறார் வைசாக்.
நீண்டநாட்கள் கழித்து மோகன்லால் இதில் பக்கா ஆக்சனோடு களம் இறங்குவதால் இந்தப்படத்திற்காக அவரது எடையை குறைக்க இருக்கிறாராம். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் தான் கவனிக்க இருக்கிறாராம். அதுமட்டுமல்ல 'சிறைச்சாலை' படத்திற்குப்பின் 25 வருடங்கள் கழித்து அவருடன் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார் இளைய திலகம் பிரபு.