ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷாலின் நடவடிக்கை ஒவ்வொன்றும் அரசியலை நோக்கி இருக்கிறதோ என சமீப காலத்தில் சந்தேகப்பட வைக்கிறது. இளம் நடிகர்கள் வட்டாரத்தில் 'சின்ன கேப்டன்' என அழைக்கப்படும் விஷால் கடந்த சில வாரங்களாகவே செய்திகளில் அதிகம் அடிபட்டு வருகிறார். ஏழைகளுக்குத் திருமணம், பள்ளிக் குழந்தைகளுக்கு பேக் என சில சமூக நல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர், நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் அதிகமாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தினமும் இவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டுதானிருக்கிறது.
இப்போது 'பாயும் புலி' படக்குழுவினருக்கு தங்கக் காசு அளித்து அடுத்து தன்னைப் பற்றிய செய்தி வருவதற்கு வழி செய்துவிட்டார். அஜித், விஜய் போன்றோர்தான் அவர்களுடைய ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படத்தில் பணியாற்றும் கலைஞர்களுக்கு ஏதாவது பரிசு வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த வரிசையில் இப்போது விஷாலும் இணைந்து விட்டார். நேற்றுடன் 'பாயும் புலி' படத்தின் முடிவடைந்துவிட்டது. கடைசி நாள் படப்பிடிப்பின் போதுதான் தங்கக் காசை விஷால் பரிசாக அளித்துள்ளார்.