ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாகி நான்கிலும் நம்பிக்கை தரும் வெற்றியைப் பெறுவது அரிதான ஒரு விஷயம். மலையாளம், கன்னடம், தெலுங்கில் 'த்ரிஷ்யம்' என்ற பெயரில் உருவாகி தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் இன்று வெளிவந்த படத்திற்கு ரசிகர்கள் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கடைசியாக நடித்து வெளிவந்த 'லிங்கா, உத்தம வில்லன்' படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது.
இந்த சூழ்நிலையில் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன்பே நடித்து முடித்திருந்தாலும் சரியான நேரம் பார்த்து படத்தை வெளியிட பாபநாசம் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர். இன்று வேறு எந்தப் போட்டியும் இல்லாத நிலையில் வெளிவந்துள்ள படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றே தெரிவிக்கிறார்கள். மலையாளத்தில் மிகப் பெரும் வெற்றியாகவும், கன்னடம், தெலுங்கில் லாபகரமான வெற்றியும் கொடுத்த இந்தப் படம் தமிழில் மாபெரும் வெற்றிப் படமாக அமைய வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
சமீப காலத்தில் குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், 'பாபநாசம்' படம் குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருப்பதாலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.