பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தயாரிப்பாளரும், இயக்குநருமான சஞ்சய் லீலா பன்சாலி, பஜிராவ் மஸ்தானி எனும் சரித்திர படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக ரன்வீர் சிங்கும், ஹீரோயின்களாக தீபிகா படுகோனே மற்றும் ப்ரியங்கா சோப்ரா நடிக்க இருக்கின்றனர். இப்படம் இந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தான் ஷாரூக்கான், கஜோல் நடிப்பில் உருவாகும் தில்வாலே படமும் ரிலீஸாக அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் இப்போது ப்ரியங்கா சோப்ராவிற்கு இதில் விருப்பம் இல்லையாம். ரன்வீர், தீபிகா உள்ளிட்ட எல்லோருக்கும் ஷாரூக்கான் படத்துடன் மோத விருப்பம் தானாம், ஆனால் ப்ரியங்காவிற்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை என்கிறார்கள். மேலும் படத்தின் வேலைகளும் அதற்குள் முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.