'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரச்சனை என வந்தால் தீர்த்து வைக்கத்தான் சங்கம் இருக்கு. ஆனால் அவர்கள் அதற்கான முயற்சியையே எடுக்காவிட்டால் அப்புறம் சங்கத்தில் இருந்து என்ன பிரயோஜனம் என கடும் வருத்ததுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் இயக்குனரும் தயாரிப்பாளருமான அன்வர் ரஷீத். சமீபத்தில் இவர் தயாரிப்பில் அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'பிரேமம்' படத்தின் திருட்டு விசிடி விற்பனை மற்றும் ஆன்லைனில் படம் திருட்டுத்தனமாக வெளியானது இவை குறித்து தயாரிப்பாளர் சங்கம் எந்த ஒரு தீர்வையும் தனக்கு வழங்கவில்லை என தனது விலகலுக்கு காரணமாக குற்றம் சாட்டியுள்ளார் அன்வர் ரஷீத்.
குறிப்பாக ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட படத்தின் காப்பி சென்சார் செய்யப்பட காபி என்றும், அது கனடாவில் இருந்து பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அன்வர் ரஷீத், சென்னை மற்றும் திருவனந்தபுரம் இரண்டு இடங்களில், இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் நடைபெற்ற முக்கிய ஸ்டுடியோக்களில் ஏன் சோதனையும் விசாரணையும் நடத்த தயங்குகின்றனர் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.