வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
கருணாஸ் நாயகனாக நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கியவர் ராம்நாத். அப்படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நவ்னீத் கவுர் நடித்திருந்தார். அவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், மயில்சாமி, கொச்சின் ஹனிபா, ஆர்.சுந்தர்ராஜன் உள்பட பலர் நடித்திருந்தனர். அப்படத்தை தயாரித்த கருணாஸ் அந்த படத்துக்கும் தானே இசையமைத்திருந்தார். அப்படம் வெற்றி பெற்றபோதும் அடுத்தபடியாக உடனடியாக படம் இயக்காத ராம்நாத், தற்போது ஜீவா-நயன்தாரா இணைந்துள்ள திருநாள் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக சிட்டி கதைகளாக நடித்து வந்த நயன்தாரா இந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் படத்தின் கதையை முதலில் கருணாசுக்காகத்தான் தயார் செய்திருந்தாராம் ராம்நாத். அதை ஒருமுறை அவர் ஜீவாவிடம் சொன்னபோது, இந்த கதையில் நானே நடிக்கிறேன் என்று முன்வந்தாராம். கருணாஸ் என்ற காமெடி நாயகனுக்காக உருவாக்கப்பட்ட கதை என்றபோதும், காமெடி கலந்த கதைகளே அதிகமாக வெற்றி பெற்று வருவதால், அந்த ஸ்கிரிப்ட்டில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே நடித்து வருகிறாராம் ஜீவா.