நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஆரம்பம், ராஜா ராணி படங்களில் நயன்தாரா ரீ-என்ட்ரி ஆனபோது அவருக்கு நிறைய பப்ளிசிட்டி தேவைப்பட்டது. அதனால் தன்னை யார் எப்போது போட்டோ எடுத்தாலும் பல கோணங்களில் போஸ் கொடுத்து வந்தார். ஆனால் இப்போது யாரையும் தன்னை போட்டோ பிடிக்க விடாமல் தடை போட்டு வருகிறார். காரணம், சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் மேக்கப் இல்லாமலேயே அழகாக தெரிந்த அவரது முகம், பத்தாண்டுகளுக்கு மேலாக மேக்கப் போட்டு நடித்துக்கொண்டிருப்பதால், முன்பு மாதிரி பொலிவுடன் இல்லையாம். அதன்காரணமாக அவர் வெளியில் தலைகாட்டினாலே புல் மேக்கப்பில்தான் வருகிறார். மேலும், அவரிடம் நெருக்கமாக பழகும் நபர்கள், பேசிக்கொண்டிருக்கும்போதே செல்பி என்ற பெயரில் மேக்கப் இல்லாமல் இருக்கும் நயன்தாராவை படம் பிடிப்பதோடு அவற்றை தங்களது பேஸ்புக்கில் இணைத்து விடுகிறார்களாம். ஆனால் மேக்கப் இல்லாமல் இருக்கும் நயன்தாரா சினிமாவில் தெரிவதுபோல் இல்லாமல் வேறு மாதிரியாக இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகிறார்களாம். அதனால் இப்போது மேக்கப்பில் இருக்கும்போதும் சரி, இல்லாமல் இருக்கும்போதும் சரி யாருமே தன்னை செல்பி எடுக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டிருக்கிறாராம் நயன்தாரா.