தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லண்டன் அழகி எமி ஜாக்சன், ''மதராஸப்பட்டினம்'' படம்மூலம் இந்திய சினிமாவில் கால்பதித்தார். தொடர்ந்து இந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷ்ய்குமாருடன் சிங் இஸ் பிலிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷ்ன் பிலிம்மாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தன்னை கவர்ந்த ஆக்ஷ்ன் ஹீரோ அக்ஷ்ய் குமார் தான் என தெரிவித்துள்ளா எமி.
இதுப்பற்றி எமி ஜாக்சன் கூறியுள்ளதாவது, சின்ன சின்ன சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மற்றும் அவரது குழுக்கள் அருமையாக சொல்லி தந்தார்கள். நாங்களும் அதை சிறப்பாக செய்தோம் என்றவர், அக்ஷ்ய் குமார் தான் பாலிவுட்டின் ஆக்ஷ்ன் மனிதர். அவர் தான் எனது பேவரைட் ஆக்ஷ்ன் ஹீரோவும் கூட என்று கூறியுளளார்.
சிங் இஸ் பிலிங் படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.