அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
"நான் நான்கு தலைமுறைகளை பார்த்தவன் என்னால் இன்றைய இளைஞர்களை தாண்டி படம் எடுக்க முடியும்" என்று பாரதிராஜா கூறினார். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்துள்ள உறுமீன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசியதாவது:
இன்றைய சினிமா அமானுஷ்ய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இளைஞர்கள் புதிதாக நிறைய யோசிக்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு கை கொடுக்கிறது. இங்கு பேசிய எஸ்.ஜே.சூர்யா என்னை பெரிதாக பேசிவிட்டு கார்த்திக் சுப்புராஜை காண்டம்ப்ரரி இயக்குனர் என்று பாராட்டினார். அப்படியென்றால் என்னை அவர் காண்டம்ப்ரரி இயக்குனர் இல்லை என்கிறார் என்று அர்த்தம்.
நான் சின்னப்பா கால சினிமாவையும் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர், சிவாஜி கால சினிமாவையும் பார்த்திருக்கிறேன். இன்றைய சினிமாவையும் பார்க்கிறேன். இன்றைய இளைஞர்களை தாண்டியும் என்னால் செல்ல முடியும் அத்தனை விஷயங்கள் என்னிடம் இருகிறது. நானும் வருகிறேன். பாபி சிம்ஹா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு விருது கிடைக்க நிறைய மெனக்கெட்டேன். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.