ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக சங்கங்கள் என்பவை தன்னை நம்பி இருக்கும் உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், நலிந்த உறுப்பினர்களின் மேம்பாட்டுக்கு வழி செய்யவும் உருவானதுதான். ஆனால் இதை செய்வதற்கு, சங்கம் எடுக்கும் நடைமுறை வழிகளில் உடன்பாடு இல்லாததால் தான் இங்கே தமிழ்சினிமா நடிகர் சங்கம் பிளவுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதேபோன்ற ஒரு சர்ச்சையில் தான் தற்போது மலையாள நடிகர் சங்கமும் (AMMA) சிக்கியுள்ளது.
வேறொன்றுமில்லை.. நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு உதவும் விதமாக மலையாள நடிகர் சங்கம் மூலம் டிவி சீரியல்களை தயாரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதில் பிரபலமாக உள்ள நடிகர்கள் கூட நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு விநியோகஸ்தர் சங்கத்தலைவரான லிபர்ட்டி பஷீர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நலிந்த கலைஞர்களுக்கு உதவ நினைத்தால் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து அதில் பெரிய ஸ்டார்களை நடிக்கவைத்து அதில் வரும் பணத்தை பயன்படுத்தலாமே.. அதைவிட்டுவிட்டு கிட்டத்தட்ட இரவுக்காட்சிகளையே நிர்மூலமாக்கி விட்ட டிவி சீரியல்களை, நடிகர் சங்கமே தயாரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அப்படியும் சீரியல் தயாரித்தால், அதில் நடிக்கும் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை நங்கள் வெளியிட மாட்டோம் எனவும் எச்சரித்துள்ளார் லிபர்ட்டி பஷீர்.