இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர்கள் தங்களின் மானேஜரை முன்னிலைப்படுத்தி சொந்தப்படம் எடுப்பது புதிய விஷயமில்லை. இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துவிட்டார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் புரொமோஷன், வியாபார விஷயங்கள் தொடங்கி பல விஷயங்களை ஆர்.டி.ராஜாதான் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கும், ஆர்.டி.ராஜாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மதனுக்கு தருவதாக இருந்த கால்ஷீட்டை கேன்சல் பண்ணினார் சிவகார்த்திகேயன். இனி சொந்தப்படத்தில் நடிப்பது என தீர்மானித்து '24 AM STUDIOS' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த கம்பெனியின் முதல் தயாரிப்பாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா!
இந்த படத்தை அட்லியின் அசிஸ்டென்ட் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ஷங்கரின் 'ஐ' படத்தில் பங்குபெற்ற 'வீடா ஒர்க் ஷாப்' நிறுவனம் இந்த படத்தின் ஒப்பனை விஷயங்களை கவனிக்கிறது. ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனையாளரை அழைத்து வந்தது ஏன்? இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பெண்ணாக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதனால் தான் வீடா வொர்க் ஷாப்பை பெரும் சம்பளம் கொடுத்து அழைத்து வந்துள்ளதாக