மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான கிருஷ்ணா திரைப்படங்களில் நடித்து வருகிறார். அலிபாபா, கழுகு, வானவராயன் வல்லவராயன், யாமிருக்க பயமே படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது விழித்திரு, யட்சன் படங்களில் நடித்து வருகிறார்.
கிருஷ்ணாவுக்கும், கோவை மாட்டம் பி.புளியம்பட்டியைச் சேர்ந்த ஹேமலதாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு வருடமேயான நிலையில் தற்போது கிருஷ்ணா மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹேமலதாவை நான் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகு இருவரும் எனது பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். என் குடும்பத்தினருடன் ஹேமலதாவால் அனுசரித்து போக முடியாததால் வடபழனியில் தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினோம்.
நான் நடிகன் என்பதால் என்னை திருமணம் செய்தால் ஆடம்பரமாக வாழலாம் என்று ஹேமலதா நினைத்திருக்கிறார். ஆனால் என்னுடைய சூழ்நிலைகளை பார்த்துவிட்டு தான் நினைத்தபடி வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டார். அதுமுதல் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்த தொடங்கினார். ஓரிரு முறை ரத்த காயம் ஏற்படுத்தினார். அவராகவே தனக்கு ரத்த காயம் ஏற்படுத்திக் கொண்டு என்மீது வீண் பழி சுமத்தினார். கடந்த 14 மாதமாக என்னை அவர் மோசமாக நடத்தினார். மனநிலை பாதிப்பு இருக்கலாம் என்று சிகிச்சை அளிக்க முயன்றபோது அதற்கும் ஒத்துழைப்புத் தரவில்லை.
தினமும் என்னை சந்தேகிக்க தொடங்கினார். அதனால் என்னால் நடிப்பு தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. பல நாள் இரவில் நான் வேலை முடிந்து திரும்பும்போது கதவை திறக்க மறுத்தார். இதனால் நான் நண்பர்கள் வீட்டில் தங்கினேன்.
இதற்கிடையில் என்னை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை பற்றி புகார் செய்தார். அவர்கள் அழைத்து விசாரித்தபோது என்மீதான புகார்களை அவரால் நிரூபிக்க முடிவில்லை. இப்போது கோவை மாவட்ட போலீசிடம் நான் வரதட்சனை கொடுமை செய்ததாக புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் என்னை துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இதனால் இனி அவருடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என்று அறிவித்து விவாகரத்து வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கிருஷ்ணா கூறியிருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.