Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவாகரத்து கேட்டு கிருஷ்ணா வழக்கு: மனைவி துன்புறுத்துவதாக புகார்

02 ஜூலை, 2015 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Actor-Krishna-apply-for-divorce

தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான கிருஷ்ணா திரைப்படங்களில் நடித்து வருகிறார். அலிபாபா, கழுகு, வானவராயன் வல்லவராயன், யாமிருக்க பயமே படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது விழித்திரு, யட்சன் படங்களில் நடித்து வருகிறார்.


கிருஷ்ணாவுக்கும், கோவை மாட்டம் பி.புளியம்பட்டியைச் சேர்ந்த ஹேமலதாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு வருடமேயான நிலையில் தற்போது கிருஷ்ணா மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹேமலதாவை நான் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகு இருவரும் எனது பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். என் குடும்பத்தினருடன் ஹேமலதாவால் அனுசரித்து போக முடியாததால் வடபழனியில் தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினோம்.


நான் நடிகன் என்பதால் என்னை திருமணம் செய்தால் ஆடம்பரமாக வாழலாம் என்று ஹேமலதா நினைத்திருக்கிறார். ஆனால் என்னுடைய சூழ்நிலைகளை பார்த்துவிட்டு தான் நினைத்தபடி வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டார். அதுமுதல் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்த தொடங்கினார். ஓரிரு முறை ரத்த காயம் ஏற்படுத்தினார். அவராகவே தனக்கு ரத்த காயம் ஏற்படுத்திக் கொண்டு என்மீது வீண் பழி சுமத்தினார். கடந்த 14 மாதமாக என்னை அவர் மோசமாக நடத்தினார். மனநிலை பாதிப்பு இருக்கலாம் என்று சிகிச்சை அளிக்க முயன்றபோது அதற்கும் ஒத்துழைப்புத் தரவில்லை.


தினமும் என்னை சந்தேகிக்க தொடங்கினார். அதனால் என்னால் நடிப்பு தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. பல நாள் இரவில் நான் வேலை முடிந்து திரும்பும்போது கதவை திறக்க மறுத்தார். இதனால் நான் நண்பர்கள் வீட்டில் தங்கினேன்.


இதற்கிடையில் என்னை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை பற்றி புகார் செய்தார். அவர்கள் அழைத்து விசாரித்தபோது என்மீதான புகார்களை அவரால் நிரூபிக்க முடிவில்லை. இப்போது கோவை மாவட்ட போலீசிடம் நான் வரதட்சனை கொடுமை செய்ததாக புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் என்னை துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இதனால் இனி அவருடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என்று அறிவித்து விவாகரத்து வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கிருஷ்ணா கூறியிருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in