வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்திற்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தற்போது தலைவராக இருக்கும் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், துணை தலைவர்கள் கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.
12 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 25 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் துணை இயக்குனர்கள். அவர்களில் 6 பேருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி தருவாதாக பேசப்பட்டதையொட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைய ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள். இதனால் செயற்குழு உறுப்பினர்கள் 12 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
இணைச் செயலளர் பதவி மட்டும் இழுபறியில் உள்ளது. 4 இணை செயலாளர் பதவிக்கு லிங்குசாமி, சுந்தர்.சி, பேரரசு, ஏகாம்பவாணன், ஜாக்கிராஜ் என 5 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் ஏகாம்பவாணனும், ஜாக்கிராஜூம் துணை இயக்குனர்கள். ஐந்துபேரில் ஒருவர் வாபஸ் பெற்றால் இணை செயலாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பேச்சு வார்த்தை தோல்வியில் முடியும்பட்சத்தில் இணை செயலாளர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது.