டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அன்வர் ரஷீத் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். ஆனால் அதைவிட அவரை ரொம்பவே பாப்புலராக்கியது ஒரு தயாரிப்பாளராக அவர் தயாரித்த 'பெங்களூர் டேய்ஸ்' மற்றும் 'பிரேமம்' படங்களின் வெற்றி தான். 'பிரேமம்' படத்தின் வசூல் வண்டி வண்டியாக அன்வர் ரஷீத்தின் ஆபீஸுக்கு வந்துகொண்டிருந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்கும் மனநிலையில் அன்வர் ரஷீத் இல்லை.. காரணம், 'பிரேமம்' படத்தை சில விஷமிகள் ஆன்லைனில் திருட்டுத்தனமாக பதிவேற்றிவிட்டுள்ளனர். இன்னும் சில விஷமிகள் பப்ப்ளிக்காக திருட்டு டிவிடியாக மாற்றி விற்றுக்கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து அன்வர் ரஷீத் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தும், இதுவரை விஷமிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.. தவறை தடுக்கவும் முடியவில்லையே என்கிற விரக்திக்கு ஆளாகி இருக்கிறார் அன்வர் ரஷீத். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆன்லைனில் பதிவேற்றப்படும் 'பிரேமம்' படத்தின் காபி சென்சார் பண்ணப்பட்ட காபியாம். அதை சென்னை மற்றும் திருவனந்தபுரம் என இரண்டு இடங்களில் உள்ள இரண்டு ஸ்டுடியோக்களில் மட்டுமே கொடுத்தோம் என்கிறார் அன்வர் ரஷீத்.. ஆனால் அங்கேயெல்லாம் போலீசார் விசாரிக்கவே இல்லை..
“தமிழ்நாட்டில் விஜய்யின் 'புலி' பட டீசரை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டவனை புகார் கொடுத்த உடனுக்குடன் கண்டுபிடித்து அரெஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் இங்கே எனது முழுப்படத்தையே திருடி விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதை மட்டும் இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லையாம்” என சைபர் போலீசின் செயல்பாடுகள் குறித்து நொந்துபோய் பேசுகிறார் அன்வர் ரஷீத். அதுமட்டுமல்ல திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய இடங்களில் 'பிரேமம்' படத்தின் திருட்டு டிவிடி பரபரப்பாக விற்பனையாவதைப்பற்றி ஆதாரத்துடன் தகவல் அளித்தும், போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்ன? என மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டிருக்கிறார் அன்வர் ரஷீத்.