Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'புலி'க்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா..? - குமுறும் அன்வர் ரஷீத்..!

02 ஜூலை, 2015 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Director-Anwar-Rasheed-disappointment

அன்வர் ரஷீத் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். ஆனால் அதைவிட அவரை ரொம்பவே பாப்புலராக்கியது ஒரு தயாரிப்பாளராக அவர் தயாரித்த 'பெங்களூர் டேய்ஸ்' மற்றும் 'பிரேமம்' படங்களின் வெற்றி தான். 'பிரேமம்' படத்தின் வசூல் வண்டி வண்டியாக அன்வர் ரஷீத்தின் ஆபீஸுக்கு வந்துகொண்டிருந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்கும் மனநிலையில் அன்வர் ரஷீத் இல்லை.. காரணம், 'பிரேமம்' படத்தை சில விஷமிகள் ஆன்லைனில் திருட்டுத்தனமாக பதிவேற்றிவிட்டுள்ளனர். இன்னும் சில விஷமிகள் பப்ப்ளிக்காக திருட்டு டிவிடியாக மாற்றி விற்றுக்கொண்டிருக்கின்றனர்.


இது குறித்து அன்வர் ரஷீத் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தும், இதுவரை விஷமிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.. தவறை தடுக்கவும் முடியவில்லையே என்கிற விரக்திக்கு ஆளாகி இருக்கிறார் அன்வர் ரஷீத். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆன்லைனில் பதிவேற்றப்படும் 'பிரேமம்' படத்தின் காபி சென்சார் பண்ணப்பட்ட காபியாம். அதை சென்னை மற்றும் திருவனந்தபுரம் என இரண்டு இடங்களில் உள்ள இரண்டு ஸ்டுடியோக்களில் மட்டுமே கொடுத்தோம் என்கிறார் அன்வர் ரஷீத்.. ஆனால் அங்கேயெல்லாம் போலீசார் விசாரிக்கவே இல்லை..


“தமிழ்நாட்டில் விஜய்யின் 'புலி' பட டீசரை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டவனை புகார் கொடுத்த உடனுக்குடன் கண்டுபிடித்து அரெஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் இங்கே எனது முழுப்படத்தையே திருடி விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதை மட்டும் இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லையாம்” என சைபர் போலீசின் செயல்பாடுகள் குறித்து நொந்துபோய் பேசுகிறார் அன்வர் ரஷீத். அதுமட்டுமல்ல திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய இடங்களில் 'பிரேமம்' படத்தின் திருட்டு டிவிடி பரபரப்பாக விற்பனையாவதைப்பற்றி ஆதாரத்துடன் தகவல் அளித்தும், போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்ன? என மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டிருக்கிறார் அன்வர் ரஷீத்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in