தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் நடித்துள்ள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் டோலிவுட்டில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அப்படத்திற்கு அடுத்து நடிகர் அல்லரி நரேஷ் இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். டோலிவுட்டின் மூத்த நடிகரான மோகன் பாபு நடிகர் அல்லரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது இப்படத்தில் நடிகர் மோகன்பாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் மோகன்பாபு இப்படத்தில் அல்லரி நரேஷின் மாமனாராக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது. மேலும் மோகன் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் , நதியா, சிம்ரன் போன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இப்படத்தை நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான மஞ்சு விஷ்ணு தனது 24 பிரேம்ஸ் பாக்ட்ரி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார்.