ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஐதராபாத்துக்கு இடம்பெயர்ந்த அஞ்சலி, அதன்பிறகு தாய்மொழியான தெலுங்கு படங்களிலேயே நடித்து வந்தார். ஆனால், அடிக்கடி அமெரிக்க சென்றதால் அதிப்படியான படங்களில் அவரால் நடிக்க முடியவில்லை. அதோடு கமிட்டான படங்களிலும் குறித்த நாளில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தயாரிப்பாளர்களுக்கு டென்சன் கொடுத்து வந்தார் அஞ்சலி. விரைவில் அஞ்சலி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஆந்திராவில் பரபரப்பு செய்திகள் பரவியது. அதனால் அங்கு அவரது மார்க்கெட் சரிந்ததால் மறுபடியும் கோடம்பாக்கத்தில் கால்பதித்தார் அஞ்சலி.
மீண்டும் வந்தவருக்கு டைரக்டர் சுராஜ் தனது அப்பாடக்கர் படத்தில் வாய்ப்பு கொடுக்க, இப்போது தனது கலகலப்பு நாயகன் விமலுடன் மாப்ள சிங்கம், கார்த்திக் சுப்புராஜின் இறைவி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. ஆனால் இந்த நேரத்திலும் அடிக்கடி அமெரிக்க சென்று வருகிறாராம் அஞ்சலி. அதோடு, அங்கிருந்தபடியே படப்பிடிப்புக்கும் அவ்வப்போது லீவு போட்டு வருகிறாராம். அவரது இந்த டேக்கா காரணமாக மாப்ள சிங்கம் படத்தின் பாடல் காட்சி திட்டமிட்டபடி நடக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறதாம்.