ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி ஆகிய படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இதில் தெகிடி படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதனால் வளர்ந்து வரும் ஹீரோக்களில் அவரும் முக்கியமான நடிகராகிவிடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதையடுத்து அவர் நடித்த சவாலே சமாளி, பிறை தேடிய நாட்கள், வரை படம், 144 ஆகிய படங்கள் வெளியாக தாமதமாகிக் கொண்டு வருவதால் தெகிடிக்குப் பிறகு அசோக்செல்வனை ரசிகர்கள் திரையில் பார்க்க முடியவில்லை.
இந்தநிலையில், ப்ரியாஆனந்துடன் இணைந்து அவர் நடித்து வரும் கூட்டத்தில் ஒருவன் படத்தின் விளம்பரங்கள் மூலம் மீண்டும் அசோக்செல்வன் பேசப்பட்டு வருகிறார். அதோடு, ஒரு படம் இயக்கி விட்டு அடுத்து முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு கிடைக்காதபட்சத்தில் அந்த இயக்குனர்கள் அசோக்செல்வனை நாடுகின்றனர்.
காரணம், சரியான படம் கிடைத்தால் இவர் பெரிய நடிகராகி விடுவார் என்பதோடு, வெயிட்டான கதைகளுக்கு அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுக்கும் திறமை இவரிடம் உள்ளது என்றும் அசோக்செல்வன் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தெரிவிக்கிறார்கள் இயக்குனர்கள்.