இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி தயாரிப்பாளராகியிருப்பவர் சி.வி.குமார். அவரது திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் வெளியான அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. தற்போது 6 படங்களை அவர் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
முக்கியமாக, முன்னணி டைரக்டர்கள் என்பது இல்லாமல், திறமையான புதியவர்களுக்கு அவரது அலுவலக கதவுகள் எந்நேரமும் திறந்தே இருக்கின்றன. அதனால் இளையதலைமுறை இயக்குனர்கள் சி.வி.குமாரின் அலுவலகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், அவரது அலுவலகத்தில் புதியவர்களிடம் கதை கேட்பதற்கென்றே ஒரு இலாகா இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி அவர்கள் கேட்ட நூற்றுக்கணக்கான கதைகளில் இருந்து தற்போது 9 கதைகளை அடுத்தடுத்து படம் தயாரிப்பதற்கு ஓகே பண்ணி வைத்திருக்கிறார் சி.வி.குமார். அதனால் அடுத்தபடியாக யாராவது சொல்லும் கதைகள் ஓகே ஆனாலும், இன்னும் ஓராண்டுக்கு பிறகு அந்த கதை படமாக்கப்படுமாம்.