இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி என்ற படத்தில் இடம்பெற்ற வாள மீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம்... என்ற ஒரேயொரு பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டவர் கானா உலகநாதன். அதோடு அந்த ஒரு பாடலை வைத்தே உலகமெங்கிலும் நடைபெற்ற தமிழ் இசைகச்சேரிகளில் பாடி புகழ் சேர்த்துக்கொண்டார் உலகநாதன்.
ஆனபோதும், அதன்பிறகு தமிழ் சினிமாவை கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது குரலை பின்னர் எந்த படத்திலும் அவ்வளவாக கேட்க முடியவில்லை. மாறாக, அதைத் தொடர்ந்து அட்டகத்தி படத்தில், ஆடி போனா ஆவணி என்று பாடியபடி என்ட்ரியான கானா பாலா கோடம்பாக்கத்தின் பிரதான கானா பாடகராகி விட்டார்.
இந்த நிலையில், தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில படங்களில் கிடைத்த சிறிய வேடங்களில் நடித்து வரும் கானா உலகநாதன், தற்போது சில இசையமைப்பாளர்களின் இசைக்கூடார கதவுகளையும் தட்டத் தொடங்கியிருக்கிறார். அதோடு, தானே எழுதி டியூன் போட்டு வைத்திருக்கும் கானா பாடல்களையும் உச்ச ஸ்தாயியில் பாடியும் காண்பித்து தனக்கு கைகொடுக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்.