பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆடுகளம் படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகரானவார் நரேன். ஆனால் அவரது தோற்றம் அப்பா வேடங்களுக்கே பொருத்தமாக இருந்ததால் படத்துக்குப்படம் அப்பாவாகவே நடிக்க வைத்து வந்தனர். அதோடு, எந்த கேரக்டர்களையும் தவிர்க்காமல் அவர் நடித்து வந்ததால் அதிகப்படங்களில் நடித்து வந்தார்.
அதோடு, எனக்கு இவ்வளவு சம்பளம் தந்தால்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போடாமல் கம்பெனிகளைப் பொறுத்து சம்பளம் வாங்கி நடித்ததால் சிறிய பட்ஜெட் கம்பெனிகளின் ஆஸ்தான நடிகராக இருந்தார் ஆடுகளம் நரேன். இருப்பினும், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும என்று நினைக்கும் அவர், தற்போது மிகச்சிறிய படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார்.
மேலும், ஹீரோ, டைரக்டர் வேல்யூ கொண்ட படங்களாக தேடுகிறார். இந்த நேரத்தில் கலியுகம் என்ற படத்தில் ஒரு அதிரடியான வில்லனாக நடித்துள்ளார் நரேன். அதனால் இந்த படம் மட்டும் வந்தால் என்மீது விழுந்துள்ள அப்பா நடிகர் என்கிற முத்திரை மாறி, அதிரடியான வில்லன் நடிகர் என்கிற இமேஜ் ஒட்டிக்கொள்ளும் என்று கூறும் நரேன், இனிமேல் நான் பாசக்கார அப்பா மட்டுமல்ல, அதிரடியான அப்பாவும்கூட என்கிறார்.