வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மைனா படத்தில் நடித்து சிறந்த குணசித்ர நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் தம்பி ராமைய்யா. இவர் மறைந்த நடிகர் முரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடிப்பில் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதன்பிறகு அவர் இயக்கிய ஒரு கூடை முத்தம் என்ற படம் கிடப்பில் கிடக்கிறது.
இந்த நிலையில், தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் அவர், தனது மகன் உமாபதியை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அப்போது தம்பி ராமைய்யாவை தொடர்பு கொண்டு அதுபற்றி விசாரித்தபோது, நடிப்பு நல்லா போய்க்கிட்டிருக்கு. அதனால் மீண்டும் படம் இயக்கும் ஐடியாவே என்னிடத்தில் இல்லை என்று தெரிவித்தார். அதோடு தனது மகன் நடிக்கும் படம் பற்றிய விவரங்களையும் அவர் சொல்ல தயங்கினார்.
ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவரது மகன் உமாபதி நடிக்கும் தண்ணி வண்டி என்ற படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. புதுமுக டைரக்டர் ஒருவர் இயக்கும் இந்த படத்தின் கமர்சியல் கருதி தம்பி ராமைய்யாவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம். அதாவது, சில வருடங்களுக்கு முன்பு அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த உ படத்திற்கு நிகராக மகனை தூக்கி நிறுத்துவதற்காக இந்த படத்தில் ஒரு வெயிட் ரோலில் பர்பாமென்ஸ் கொடுத்து வருகிறாராம் தம்பிராமைய்யா.