ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் படம் ஏபிசிடி-2. வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபுதேவா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த இப்படத்தை ரெமோ டிசோசா இயக்கியிருந்தார். இப்படத்தில் குரூப் டான்ஸர் வேடத்தில் நடித்தவர் நிலேஷ் நிர்பாவனே. இவர் மும்பையில் வசிக்கிறார்.
இந்நிலையில், நிலேஷ், மனநலம் பாதித்த 14 வயது சிறுமி ஒருவரை, கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளார். தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொடூர செயலை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி சிறுமியின் பற்களை இரண்டையும் உடைத்திருக்கிறார்.
சிறுமியின் பெற்றோருக்கு இந்த விஷயம் எதுவும் தெரியவில்லை. பள்ளியில் இருந்தபோது சிறுமியின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் தெரிந்துள்ளது. இதனையடுத்து பள்ளி ஆசிரியை ஒருவர் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் புனே போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க, போலீசார், நிலேஷை விசாரித்துள்ளனர். அதில் தான் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நிலேஷை கைது செய்துள்ளனர். மேலும் நிலேஷின் நண்பர்கள் மூவரும் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.