விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
இந்திய சினிமாவின் டாப் மோஸ்ட் கிராபிக்ஸ் டிசைனர் ஸ்ரீனிவாஸ் மோகன். சிவாஜி, ஐ, எந்திரன், நான் ஈ படங்களுக்கு கிராபிக்ஸ் பணியாற்றியவர். தப்போது பாகுபலி படத்தில் பணியாற்றி வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இனி வரும் காலங்களில் பிரமாண்ட படங்களே மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும். அப்படிப்பட்ட பிரமாண்ட படங்களுக்கு கிராபிக்ஸ் முக்கியம். எல்லாவற்றையும் நேரடியாக படம்பிடிக்க நிறைய செலவாகும். அதையே கிராபிக்சில் செய்தால் செலவு குறையும். கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்ய தற்போது தொழில்நுட்பம் வந்து விட்டது. பாகுபலி படத்திற்கு பிறகு கிராபிக்சில் வலிமை அனைவருக்கும் தெரிய வரும். நடிகர் நடிகைகள் தவிர மற்ற அனைத்திலுமே கிராபிக்சின் பங்கு இருக்கும்.
சிறிய பட்ஜெட் படங்களில்கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகள் இருக்கும். தற்போது சினிமாவில் 24 கலை பிரிவுகள் இருக்கிறது. தற்போது 25வது கலைப் பிரிவாக கிராபிக்ஸ் இணைந்துள்ளது. இனி சினிமாவில் கிராபிக்ஸ் தவிர்க்க முடியாத, பிரிக்க முடியாத அங்கமா இருக்கும். என்றார்.