ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தையும் தயார் செய்து விட்டார் பார்த்திபன். அதற்கு கதை இருக்கு என்று டைட்டில் வைத்தார். ஒரு இயக்குனர் தன் மனதுக்கு பிடித்த கதையை படமாக இயக்க எப்படியெல்லாம் போராட வேண்டியது இருக்கிறது என்பது அந்த கதையின் கரு. இது தவிர வேறு சில ஸ்கரிப்டுகளும் வைத்துள்ளார். எல்லாமே தயாரிப்பாளர் கிடைத்தால் மறுநாளே ஷூட்டிங் போகிற மாதிரியான பக்கா ஸ்கிரிப்ட்கள்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தயாரித்த நிறுவனமே அடுத்த படத்தையும் தயாரிக்கலாம் என்றிருந்த நிலையில் அந்த நிறுவனம் தயாரித்த இன்னொரு படம் தோல்வி அடைந்து விட்டதால் அவர்கள் இப்போது புதிய படம் தயாரிப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் பார்த்திபன் பல புதிய தயாரிப்பாளர்களை தேடி வருகிறார்.
இதற்கிடையில் இருக்கிற நேரத்தை வீணடிக்க விரும்பாமல் நடிக்க வரும் வாய்ப்புகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த வீரக்கால் தெய்வங்கள், பேட் பாய்ஸ் மலையாளப் படங்களைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடிக்க வாய்ப்பு குவிகிறது. தாதா இன் பேக் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சமீபத்தில் மாசு படத்தில் நடித்தார். தற்போது நானும் ரவுடிதான், சூதாடி படங்களில் நடித்து வருகிறார். அடுத்து படம் இயக்கும் திட்டத்தில் இருப்பதால் நடிப்பையும் குறைத்து வருகிறார். இன்னும் ஓரிரு வாரத்தில் அவர் இயக்கப்போகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளிவரலாம் என்கிறார்கள்.