தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கடந்த சில ஆண்டுகளாவே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இடையில் வந்த த்ரிஷ்யம் படம் மட்டுமே அவர் கடந்த சில வருடங்களில் ருசித்த வெற்றி. அதுவும் கதைக்கு கிடைத்த வெற்றிதான், மோகன்லாலுக்கு கிடைத்த வெற்றி இல்லை என்பதை அதற்கு பிறகு வந்த படங்களின் தோல்வி உணர்த்தி இருக்கிறது. த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு அவர் நடித்த கீதாஞ்சலி, மிஸ்டர் பிராடு, கூதரா, பெருச்சாழி, ரசம், என்னும் எப்பொழும், லை ஓ லைலா படங்கள் தோல்வி அடைந்தது.
அண்மையில் தனது திரைப்பட நண்பர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்திய மோகன்லால் தனது தோல்விகள் குறித்து விவாதித்திருக்கிறார். மலையாள ரசிகர்கள் ஹீரோக்களுக்காக படம் பார்ப்பது குறைந்து விட்டது. நல்ல கதையம்சமுள்ள படங்களை மட்டுமே பார்க்கிறார்கள். பெங்களூர் டேஸ், ஷட்டர், ஹவ் ஓல்ட் ஆர் யூ படங்கள் கதைக்காகவே வெற்றி பெற்றிருக்கிறது. என்பது அவர்கள் ஆய்வில் தெரியவந்தது. இதனால் இனி வருடத்திற்கு ஒரு படம் நடிப்பது, அதுவும் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்.