ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
நடிகர் எஸ்.வி.சேகர் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். தணிக்கை குழுவின் விதிமுறைகள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உள்ளது. அதனை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிடுகிறார் எஸ்.வி.சேகர். இதுபற்றி அவர் கூறியதாவது:
திரைப்படம் இயக்குபவர்கள், தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு தணிக்கை குழு விதிமுறைகள் தெரியவில்லை. அதனால் அவர்களை அறியாமலேயே தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை எடுத்து வந்து விடுகிறார்கள். பின்பு அதனை நீக்குகிறார்கள். இதனால் அவர்களுக்கு பணம், நேரம், உழைப்பு அனைத்தும் வீணாகிறது. தணிக்கை குழு விதிமுறைகள் முழுமையாக தெரிந்திருந்தால் அந்த காட்சிகளை அவர்களே தவிர்த்துவிடுவார்கள்.
தணிக்கை குழுவின் விதிமுறைகள் ஆங்கிலத்தில் படிக்கமுடியாத அளவிற்கு சிறிய எழுத்துக்களில் உள்ளது. அதனை நான் தற்போது தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட இருக்கிறேன். தற்போது புத்தகம் தயாராகி வருகிறது. சுமார் 250 பக்கங்கள் கொண்ட புத்தகம் சுமார் 150 ரூபாய் விலை வரும். படம் தயாரிக்க வருகிறவர்கள், இயக்குகிறவர்கள் இந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொண்டு படம் எடுத்தால் தணிக்கை குழு பிரச்சினைகளில் சிக்காமல் இலகுவாக படத்தை வெளியிடலாம். என்றார்.