இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த்திரைப்பட இயக்குநர்களில் துப்பாக்கி வெடித்ததுபோல் படபடவென பேசும் பழக்கம் கொண்டவர் இயக்குநர் கரு.பழனியப்பன். படபடவென பேசுவது மட்டுமல்ல தான் பேச நினைத்ததை தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசக்கூடிய கரு.பழனியப்பன் மனதில் படத்தை வெளிப்படையாகப் பேசக்கூடிய தைரியசாலி.
சினிமாவிழாக்களில் பேசும்போது, மேடையில் எப்பேற்பட்ட ஆட்கள் இருந்தாலும் அதைப்பற்றி கவலையேப்படாமல் தான் சொல்ல நினைத்ததை சொல்லிவிடுவார்.
இன்று காலை நடைபெற்ற உறுமீன் இசைவெளியீட்டுவிழாவிலும் அப்படித்தான்.
பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நடித்த உறுமீன் படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்கு வந்த பலரும் வழக்கம்போல் பாராட்டுமழையில் நனையை வைத்துக் கொண்டிருக்க, யாருமே எதிர்பாராத ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தார் கரு.பழனியப்பன். நடிகைகளின் பெயர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதி பற்றி சாடித்தள்ளிவிட்டார்.
ரேஷ்மி மேனன் பற்றி பேசும்போது அவரது பெயருக்குப் பின்னால் உள்ள சாதியைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய கரு.பழனியப்பன், சாதி அடையாளம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.