டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'இன்று நேற்று நாளை' படம் வெற்றி பெற்றுவிட்டது என படத் தயாரிப்பு நிறுவனமே இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது. அதோடு, விரைவில் இரண்டாம் பாகத்தையும் பிரபல முன்னணி நடிகர் நடிக்க எடுக்க உள்ளோம் என்றும் அறிவித்தார்கள். அப்படியென்றால் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷாலே இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் முதல் பாகத்தில் நடித்த நாயகனேதான் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார். ஆனால், 'இன்று நேற்று நாளை' படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யாவை இரண்டாம் பாகத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.
இது சம்பந்தமாக விஷ்ணு விஷாலும் எந்த விதமான வருத்தத்தையும் காட்டிக் கொள்ளவில்லை என்கிறார்கள். விஷ்ணு விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள், அவரேதான் ஆர்யாவை, படத் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்றும் சொல்கிறார்கள். மேலும் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த 'ஜீவா' படத்தைக் கூட ஆர்யாவும், விஷாலும் வாங்கி வெளியிட்டுள்ளார்கள். அதோடு சி.வி.குமார் தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வழங்கி வருகிறார். அதனால், 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாக விவகாரத்தில் எந்தப் பிரச்சனையும் எழ வாய்பேயில்லை என விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.