ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் மற்றும் பலர் நடிக்க ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு மே மாதக் கடைசியில் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என்ற பெயரிலும் இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது சென்னை, விஜிபி கோல்டன் பீச்சில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு 'பார்' அரங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு மொழியில் வெளிவந்த 'ஸ்லீப்லஸ் நைட்ஸ்' என்ற படத்தைத் தழுவி உருவாக்கப்படும் படம் இது என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது, கமல்ஹாசனின் மகனை கடத்தி வைத்துள்ள கடத்தல் கும்பலிடமிருந்து அந்த மகனைக் காப்பாற்றும் முயற்சியில் கமல்ஹாசன் உள்ளிட்ட, போலீஸ் அதிகாரிகள் முயலும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரிஷா, கிஷோர் ஆகியோரும் படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடிப்பதாகத் தெரிகிறது. பிரகாஷ்ராஜ்தான் மெயின் வில்லன் என்கிறார்கள்.
இந்த மாதத்துடன் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட அதிக வாய்ப்புள்ளதாம். அப்படி முடிவடைந்தபின் உடனடியாக இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு படத்தை தீபாவளிக்கோ, அதற்கு முன்னதாகவோ வெளியிடும் திட்டமிள்ளதாம். அப்படியென்றால் இந்த கமல்ஹாசன் நடித்து மூன்று படங்கள் திரைக்கு வந்த சாதனை நீண்ட வருடங்கள் கழித்து நடக்கும். ஏற்கெனவே 'உத்தம வில்லன்' படம் வெளிவந்துள்ளது, இன்னும் சில நாட்களில் 'பாபநாசம்' வர உள்ளது. அடுத்து, 'தூங்காவனம்' படமும் தீபாவளிக்கு வெளிவந்தால் மொத்தம் மூன்று படங்களாகிறது. அப்படியே 'விஸ்வரூபம் 2' படத்தையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.