நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மிதுன் சக்கரவர்த்தி, இன்று 40 வயதைக் கடந்துள்ள பெண்கள், கல்லூரியில் படித்த காலத்தில் இவருடைய பல படங்களைப் பார்த்துக் கொண்டாடியிருப்பார்கள். 1980களிலும், 1990களிலும் என அந்த 20 வருடங்களில் மட்டும் இவர் நடித்த 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. 1976ம் ஆண்டு மிருணாள்சென் இயக்கத்தில் அறிமுகமான 'மிருகயா' படமே இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. அதற்கடுத்து 1992லும், 1995லும் தேசிய விருதுகளைப் பெற்றவர் மிதுன். 1982ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த 'டிஸ்கோ டான்சர்' படம் மாபெரும் வெற்றி பெற்று இவருக்கு மிகப் பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தமிழில் ஆனந்தபாபு நடிக்க 'பாடும் வானம்பாடி' என்ற பெயரிலும் ரீமேக்காகி இங்கும் வெற்றி பெற்றது. அந்தக் கால கட்டங்களில் தமிழ் சினிமாவிலும் டிஸ்கோ டான்ஸ் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியதற்குக் காரணம் மிதுன் சக்கரவர்த்திதான். கமல்ஹாசன் போன்றவர்களின் படங்களில் கூட டிஸ்கோ டான்ஸ் இல்லாமல் படங்கள் வெளியாகாது. 'டிஸ்கோ' என்ற வார்த்தை இந்தியா முழுவதும் பரவ மிதுன் சக்கரவர்த்தியும் ஒரு காரணம்.
அப்படி பல வசூல் சாதனைப் படங்களைக் கொடுத்த மிதுன் சக்கரவர்த்தி 'யாகாவாராயினும் நா காக்க' படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். ஆனால், அவருடைய அறிமுகத்தைப் பலரும் கண்டு கொள்ளவேயில்லை. அந்தப் படக்குழுவினர் கூட மிதுன் சக்கரவர்த்தியை எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கும் அழைத்து கூட வரவில்லை. மிதுனும் எந்த ஒரு பேட்டியையும் படத்தைப் பற்றித் தரவில்லை. தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புள்ள மிதுன் சக்கரவர்த்தி தமிழ்ப் படத்தில் நடித்ததைப் பற்றிப் பேசத் தயங்குவதன் காரணம் என்ன என்று தெரியவில்லை. படக்குழுவினர்தான் அது பற்றி விளக்க வேண்டும். ஒரு வேளை மிதுன் எதிர்பார்த்த அளவிற்கு படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று வருத்தப்படுகிறாரா என்றும் தெரியவில்லை.
ஒரு புகழ் பெற்ற ஹிந்தி நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது அதிகம் கண்டு கொள்ளப்படாமல் போனது வருத்தமே.