தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பூர்வாங்க வேலைகள் தொடங்கி விட்டன. ரஜினி -பா.ரஞ்சித் கூட்டணி என்பது பலருக்கு நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தது. எதையும் பிரமாண்டமாகச் செய்யும் கலைப்புலி எஸ்.தாணு இந்த புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க விரும்பியிருக்கிறார். உலகப்புகழ் பெற்ற ரகுமான் இசை என்றால் படத்தின் வியாபார மதிப்பு பல மடங்காகும் என்று நினைத்தாராம்.
எவ்வளவோ முறை இந்த விஷயத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் ரஜினியிடம் தாணு கூற ரஜினியோ, ஒரு கட்டத்தில் அவர்கள் படக்குழுவில் ஒரு யூனிட்டாகச் சேர்ந்து எல்லாமும் செய்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி விட்டு விடலாம். ஒரு முறை எல்லாம் மாற்றித்தான் பார்ப்போமே. இத்தோடு இதை விட்டு விடலாமே என்று கறாராகக் கூறிவிட்டாராம்.
வெற்றிகரமான முதல்நிலை தொழில்நுட்பக் கலைஞர்களை தேடித்தேடிப் பிடித்து ரஜினி படக்குழு உருவாவது வழக்கம். இப்படி படக்குழுவை இவ்வளவு சுதந்திரமாக இயங்க வைத்திருப்பதை ரஜினியிடம் ஏற்பட்டுள்ள மன மாற்றமாகவே பேசிக் கொள்கிறார்கள்.