பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ள இன்று நேற்று நாளை படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழவதும் 150 தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் 3 கோடி வசூலித்துள்ளது. குறைந்த தியேட்டர்களில் வெளியாகி அதிக வசூலை குவித்த படங்களில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது தியேட்டர்கள் அதிகப்பபடுத்தப்பட்டு வருகிறது. படத்தை வெளியிட்ட அபி அண்ட் அபி நிறுவனம்.. இதுவரை 50 தியேட்டர்களை அதிகப்படுத்தியுள்ளது.
இன்று நேற்று நாளைக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முதல் பாகம் தயாராகும்போதே இயக்குனர் ரவிகுமார் அதன் இரண்டாம் பாக கதையையும் முடிவு செய்து விட்டார். 2065ம் ஆண்டு விஞ்ஞானி ஆர்யா மீண்டும் டைம் மிஷினை 2015க்கு அனுப்புகிறார் என்பதிலிருந்து இரண்டாம் பாக கதை தொடங்குகிறது. இரண்டாம் பாகத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.