ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நரேன் நடிக்கும் படம் கத்துக்குட்டி. சிருஷ்டி டாங்கே ஹீரோயின். சூரி, ஞானவேல், காதல் சந்தியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், அருள்தேவ் இசை அமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
படத்தை பற்றி அதன் இயக்குனர் இரா.சரவணன் கூறியதாவது: பொதுவாக தஞ்சை மக்கள் நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுக்கிறவர்கள். அவர்கள் வாழ்க்கையில் நகைச்சுவை பின்னியிருக்கிறது. அந்த தஞ்சை பின்னணில் உருவாகி இருக்கும் படம் கத்துக்குட்டி. முதன் முறையாக நரேன் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரும் சூரியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜை நரேனின் தந்தையாக நடிக்க வைத்திருக்கிறேன். தந்தை மகன் உறவுக்கு அடையாளமாக ஜெயராஜ், நரேன் நடிப்பு இருக்கும். காதல் சந்தியா ஒரு பாட்டுக்கு ஆடியிருப்பதும், சூப்பர் சிங்கர் அழகேசன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதும் படத்தின் கமர்ஷியல் வேல்யூவை அதிகப்படுத்தும். படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார்.