ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னாள் ஹீரோயின் ஜெயப்பிரதாவின் மகன் சித்து அறிமுகமாகும் உயிரே உயிரே படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சத்யம் திரையங்கில் நடந்தது. அரசியல் பிரமுகர் அமர்சிங். இந்தி நடிகர் அனில் கபூர், மோகன்பாபு உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகை ராதிகா, "இன்றைய இளம் நடிகர்களிடையே ஒற்றுமை இல்லை, வானத்தை பார்த்து எச்சில் துப்புகிறார்கள். அது அவர்கள் மீதுதான் விழும் என்று தெரியவில்லை" என்று பேசினார். அவரது கணவர் சரத்குமாரை எதிர்த்து விஷால், கார்த்தி போன்ற இளம் நடிகர்கள் பிரச்சாரம் செய்வதை மறைமுகமாக குறிப்பிட்டு இப்படி பேசினார்.
இந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ராஜசேகர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: நான் இயக்கி வரும் உயிரே உயிரே படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராதிகா இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. வானத்தை பார்த்து மேலே எச்சில் துப்புகிறார்கள் என்று பேசினார். ஒரு படத்தின் விழா மேடையில் அந்த படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றித்தான் பேச வேண்டும். ஆனால் அரசியல் நோக்கில் நடிகர் சங்க பிரச்னையை ராதிகா பேசியது கண்டிக்கத்தக்கது. இன்று இளம் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவருக்கு படங்களை சிபாரிசு செய்கிற அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள். என்றார்.
பத்திரிகையாளராக இருந்த ராஜசேகரை சத்யம் படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கியவர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.